கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, நேரு நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் கவுதம் ( வயது 19 )பிளஸ் 2 படித்து முடித்துள்ளார். இவரது நெருங்கிய நண்பர்களான தேவா, புகழேந்திரன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் மரணம் அடைந்தனர்.இதனால் கவுதம் மனம் உடைந்து காணப்பட்டார். தனது நண்பர்களின்இறப்பை நினைத்துதினமும் ஏங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில்துக்கம் தாங்க முடியாமல் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம்சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவர் தாயார் சித்ரா பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0