கோவை பீளமேடு பகுதியில் பாஜக அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய மந்திரி அமித்ஷா கோவை வர உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமான மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு கோவை வந்தார் . அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் வரவேற்பு அளிக்கிறார்கள்.பின்னர் அவிநாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார். இன்று ( புதன்கிழமை) காலையில் பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதை தொடர்ந்து அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் .இதில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் முடிந்ததும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார் . பின்னர் மாலையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். இதற்காக நாளை (புதன்) மாலை 4 மணி அளவில் நட்சத்திர ஓட்டலில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையம் செல்கிறார் .அங்கு அவருக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்பு அளிக்கிறார். இதையடுத்து அவர் அங்குள்ள தியானலிங்கம் இருக்கும் இடத்துக்கு சென்று லிங்க பைர வியை வழிபடுகிறார். சிவராத்திரி விழா நடைபெறும் ஆதியோகி சிலை இருக்கும் இடத்துக்கு கார் மூலம் செல்கிறார் .அங்கு நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்ததும் அமித்ஷா ஈஷா மையத்தில் தங்கி ஓய்வெடுக்கிறார் மறுநாள் வியாழன் காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையத்திற்கு சென்று தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார் .மத்திய மந்திரி அமித்ஷா கோவை வருகையை யொட்டி தமிழ்நாடு காவல்துறைசட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மேற்பார்வையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில்குமார், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக கோவை மாநகர பகுதியில் இருந்து 3 ஆயிரம் போலீசாரும், புறநகர் பகுதியில் இருந்து 4 ஆயிரம்போலீசாரும் என மொத்தம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் இருந்து ஈஷா யோகா மையம் செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர மத்திய மந்திரி அமைச்சர் தங்கும் நட்சத்திர விடுதி ,கட்சி அலுவலகம் மற்றும் பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வந்துள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை சாவடிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மற்றும் மாநகர் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர “பட்ரோல்” போலீசாரும்,தீவிரரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை விமான நிலையத்திலிருந்து மத்திய மந்திரி தங்கும் ஓட்டலுக்கு செல்லும் பாதை, பாஜக புதிய அலுவலக கட்டிடம், ஈஷா யோகா மையத்துக்கு செல்லும் பாதை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பீளமேட்டில்புதிதாக திறக்கப்பட உள்ள பாஜக கட்சி அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டார். மேலும்பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார்.கோவை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0