கோவை சுந்தராபுரம், சிட்கோ, பிள்ளையார் கோவில் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் நவநீதன். ( வயது 17) மதுக்கரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2படித்து வந்தார்.இவரது நண்பர் தனுஷ்கடந்த மாதம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் இருந்து நவநீதன் மன அழுத்தத்துடன் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில்யாரும் இல்லாத நேரம் மின்விசிறிகொக்கியில் வேட்டியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை ரங்கநாதன் சுந்தரபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0