கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ளமுத்து மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் வினோத்குமார் ( வயது 34 )இவர் நேற்று ராம்நகர் பட்டேல் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஏதோ ஒருவாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த வினோத்குமார் அதே இடத்தில் இறந்தார்.. இது குறித்து அவரது தாயார் பூவாத்தாள் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய் போலீசில் புகார் செய்தார். இதேபோல சிங்காநல்லூர் மார்க்கெட் ரோடு சி.எம்.சி, காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி இவரது மனைவி முருகம்மாள் (வயது 60 )இவர் நேற்று ஒண்டிப்புதூர் திருச்சி ரோட்டில் ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த பாசஞ்சர் ஆட்டோ இவர் மீது மோதியது. இதில் முருகம்மாள் படுகாயம் அடைந்தார் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து சிங்காநல்லூர் கமலா மில் குட்டை நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் ( வயது 35 )என்பவரை கைது செய்தனர் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0