கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஆர். எஸ். புரத்தில் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது .அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ் பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் என மொத்தம் 2000 போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இன்று காதலர் தினம் என்பதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், பூங்காக்கள், கோவில் உள்ள குளக்கரைகள் ஆகிவற்றிலும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0