ஆற்றில் மூழ்கி வியாபாரி மகன் சாவு.

கோவை மாவட்டம் வால்பாறை கோ ஆப்ரேட்டிவ் காலனியை சேர்ந்தவர் சாஜூ. துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சியாம் கிருஷ்ணா ( வயது 25) இவர் நேற்றுவெள்ளமலை மட்டம், கரும்பாலம் ஆற்றுக்குநண்பர்களுடன் குளிக்க சென்றார்.திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால்நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார் இது குறித்து அவரது தந்தைராஜு வால்பாறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.