கோவையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்டம் – ஒழுங்கு போலீசாரும் அபராதம் விதிப்பார்கள்.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தகவல்.

கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக போக்குவரத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக் கையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அத்துடன் ஒவ்வொரு சிக்னலிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப் பட்டுள்ளதால் அந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை வைத்தும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது .மேலும் விபத்து க்கள் அதிகமாக நடக்கும் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது .குறிப்பாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது ,கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுபவர்கள், குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது அபராதம் விதித்து வருகிறார்கள். இதன் காரணமாக மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பது குறைந்து வருகிறது. இந்த பணியில் போக்கு வரத்து போலீசார் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் சட்டம் – ஒழுங்கு போலீசாரும் அபராத விதிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர்சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். இதனால் விபத்துக்கள் குறைவதுடன் குற்ற சம்பவங்களும் தடுக்கப்படும்.