கோவை கவுண்டம்பாளையம், சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரபு . இவரது மகள் சாருமதி (வயது 19) கவுண்டம்பாளையத்தில் உள்ள “பிளே ஸ்கூலில் ” ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதி சேர்ந்த பாபு என்பவருக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் சாருமதி நேற்று வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப் பட்டுள்ளது இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார். இதே போல கோவை குனியமுத்தூர் ,குமரன் கார்டனை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகள் அங்குள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை முத்துப் பாண்டி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீஸ் விசாரணையில் அவரது மகள் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் காதல் வைத்திருந்ததாகவும் , அவருடன் மாயமாகி விட்டது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0