கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை, ஜே.கிருஷ்ணாபுரம்பக்கம் உள்ள வலசு பாளை யத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து ( வயது 62) விவசாயி. இவரது இளைய மகன் பாஸ்கர் (வயது 25) இவர் தனது தந்தை வீட்டின்அருகே மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார் .அவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். தந்தை – மகனுக்கு இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்தது .இந்த நிலையில் கடந்த 22,ஆம் தேதி காளிமுத்துவுக்கு சொந்தமான தோட்டத்தில் பாஸ்கர் தனது மாட்டை கட்டி உள்ளார் .அப்போது அங்கு சென்ற தந்தை காளிமுத்து மாட்டை அவிழ்த்துவிட்டு இங்கு ஏன் மாடு கட்டுகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் தந்தை காளி முத்துவை தகாத வார்த்தையால் திட்டியதுடன், அருகில் கிடந்தஇரும்பு கம்பியை எடுத்து தலையில் தாக்கினார் .இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை அறிந்த காளிமுத்துவின் மூத்த மகன் மதன் குமார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த தனது தந்தை யை செஞ்சேரி மலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் .அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் காளிமுத்து நேற்று இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மகன் பாஸ்கரை கைது செய்தனர். சொத்து தகராறு காரணமாக மகன் தந்தையை தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0