கோவை சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பிளஸ் 1 படிக்கும் மாணவர். இவர் கடந்த சில நாட்களாக உடல் சோர்வுடன் காணப்பட்டார். இது குறித்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் விசாரிக்கையில் அந்த மாணவருக்கு அவரது வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் மில் தொழிலாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் கோவை “சைல்டு லைன் ” அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த அமைப்பினர் பள்ளிக்கு விரைந்து வந்து அந்த மாணவரிடம் விசாரணை நடத்தினர். அதில் மில்தொழிலாளி ஒருவர் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில்சூலூர் அனைத்து மகளிர் போலீசார் மாணவரின் வீட்டிற்கு அருகில் குடியிருந்து வந்த பாபநா சத்தை சேர்ந்த மில்தொழிலாளி சுப்பிரமணி (வயது 43) என்பவரைநேற்று கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0