கோவை இருகூர், பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூபதி ( வயது 76) இருகூரில் இவருக்கு சொந்தமான 32.71 சென்ட் இடம் உள்ளது.இந்த இடத்தை காஞ்சிபுரம் மாவட்டம், ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரில் வசிக்கும் தனது மகள் மாலதி ( வயது 39) கணவர் பிரவீன் குமார் ( வயது 41) ஆகியோர் சேர்ந்துபூபதிக்கு தெரியாமல் விற்பனை செய்து விட்டனர். இதை அறிந்த பூபதி இது தொடர்பாக சிங்காநல்லூர்பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தார்.அப்போது அந்த நிலத்தை மகள் மாலதியும், அவரது கணவர் பிரவீன் குமாரும் சேர்ந்து அவரது தந்தை பூபதியும், தாயாரும் இறந்து விட்டதாக பொய் சான்றிதழ் கொடுத்துமோகன்ராஜ் என்பவருக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇந்த இடத்தைவிற்பனை செய்வதற்கு தனது மருமகன் பிரவீன் குமார்சாட்சிகையெழுத்து போட்டு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.இந்த இடத்தின் மதிப்பு ரூ.4கோடி இருக்கும். இது குறித்து பூபதி சிங்காநல்லூர் போலீசில்புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மகள் மாலதி (வயது 39) அவரது கணவர் பிரவீன் குமார் (வயது 41) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இவர்கள் மீதுமோசடி உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுஇருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0