கோவை பீளமேடு ,காந்தி மாநகரை சேர்ந்தவர் நரசிம்மநாராயணசாமி (வயது 41) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.அவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு அழைப்பு வந்தது. அதில் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது இதை நம்பிய நரசிம்ம நாராயணசாமி பல்வேறு தவணைகளில் 13 லட்சத்து 96 ஆயிரத்து 150 ரூபாயை அனுப்பி வைத்தார். லாபத் தொகை எதுவும் வரவில்லை.. பிறகு அந்த எண்ணுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நரசிம்ம நாராயணசாமி கோவை சைபர் கிரைம்போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து சரவணன் நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0