கோவை அருகே உள்ள வடவள்ளி, பெரியார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53) ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 20ஆம் தேதி ரமேஷ் வீட்டில்யாரும் இல்லாத நேரம் ஒரு கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 52 பவன் தங்க நகைகள், ரூ.1.5 லட்சம்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரமேசின் வீட்டு வேலைக்கார பெண் தேவிகா கொடுத்த தகவலின் பெயரில் 5 பேர் கொண்ட கும்பல் நகைகளை திருடியது தெரியவந்தது. இதை யடுத்து வடவள்ளியை சேர்ந்த தேவிகா ( வயது 40) மோகன கிருஷ்ணன் ( வயது 27) கொல்லம் பிரவீன் ( வயது 41) மலப்புரம் சைபுதீன் ( வயது 42) தினேஷ்குமார் ( வயது31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நகை – பணம் மீட்கப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0