பியூட்டி பார்லரில் விபச்சாரம். பெண் கைது

கோவை பீளமேடு பக்கம் உள்ள சேரன் மாநகர் ,பாலாஜி நகரில் ஒரு வணிக வளாகத்தில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் நஸ்ரின் ஆகியோர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதை நடத்தி வந்த நேரு நகர் பாலாஜி நகர் சேர்ந்த அஜிதா ( வயது 43) கைது செய்யப்பட்டார். சபீர் என்பவர் தலைமறைவாகிவிட்டார் .இவரை தேடி வருகிறார்கள். பியூட்டி பார்லர் சீல் வைக்கப்பட்டது.