கோவை சிறையில் கைதி திடீர் சாவு

கோவை;  திண்டுக்கல் மாவட்டம் தசரா பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 46) இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உடுமலையில் நடந்த ஒரு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று காலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிறையில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த சிறை வார்டன்கள் அவரை சிறையில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்தனர் அங்குஅவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கணேசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..