கேவை மத்திய சிறையில் போக்சோ கைதி திடீர் சாவு.

கோவை ரத்தினபுரி ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் செந்தில் (38). இவர் கடந்த 2022ம் ஆண்டு போக்சோ வழக்கில் கோவை கிழக்கு பகுதி மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் செந்தில் சர்க்கரை நோயால் அவதிபட்டு வந்தார். அதற்காக சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் மற்றும் போலீசார் அவரை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு செந்திலை பரிசோதனை செய்த டாக்டர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித் தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.