பிளஸ் 1மாணவி கடத்தல். போக்சோவில் வாலிபர் கைது.

கோவை; நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சந்தானம் ( வயது 24) இவர் கோவை மாவட்டம் சூலூரில் தங்கி இருந்து ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .அப்போது தொண்டாமுத்தூரில் உள்ள அரசுமேல்நிலை பள்ளியில் படிக்கும் பிளஸ் 1படிக்கும் மாணவிக்கும் சந்தானத்துக்கும் இடையே “இன்ஸ்டாகிராம் ” மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது. இதை யடுத்து அந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி சந்தானம் தனது சொந்த ஊருக்கு கடத்தி சென்று விட்டார். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கல்லிடைக்குறிச்சி சென்று சந்தானத்தை கைது செய்தனர் இவர் மீது “போக்சோ ” சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மீட்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.