கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் சரவண சுந்தர். இவர் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஈரோட்டில் சிறப்பு அதிரடிப்படை சூப்பிரண்டாக பணி புரிந்த சசி மோகன் பதவு உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலைரேஸ்கோர் சில் உள்ள டி. ஐ.ஜி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:- கோவை சரகத்தில் ஏற்கனவே சில மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ளேன். கோவை சரகத்தில் சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும். பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். கோவை புறநகர் எல்லைகளில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க ரோந்து பணி அதிகரிக்கப்படும். மேலும் விழிப்புணர்வு நடத்தி போதை பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோர்ட்டில் நிலுவை வழக்குகளில் தலை மறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யவும், குற்றவழக்குகளை விரைந்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.கோவை சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களிலும் சட்டம் -ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார் .புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட டி.ஐ..ஜி. சசி மோகனுக்கு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0