கோவை; நீலகிரி மாவட்டம், கூடலூர் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 26) இவர் குற்றவழக் ல் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று இவர் சிறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார் .உடனே சிறைவார்டன்கள் அவரை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர் .பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். அவர்எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0