2வீடுகளில் பூட்டை உடைத்து 19பவுன் நகை – பணம் கொள்ளை.

கோவை சரவணம்பட்டி பூந்தோட்டம் நகர் பக்கம் உள்ள கார்த்திக் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி பிரபா சத்திய பிரியா ( வயது 45 ) இவர் கடந்த 28-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரானசத்தியமங்கலம் சென்றிருந்தார். நேற்று அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுஜாதா என்பவர் அவருக்குபோன் செய்து வீட்டின் முன் கதவு பூட்டு உடைந்துகிடப்பதாக கூறினார். இதைய டுத்து வந்து பார்த்தபோது வீட்டில்படுக்கை அறையில் உள்ள கப்போர்டில்இருந்த 16 பவுன் தங்க நகைகள், பணம் ரூ 28ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்பால சதீஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இதே போல கோவை ஆர் .எஸ் . புரம் பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் சுப்பிரமணி .இவரது மனைவி மாசிலாமணி வயது 40 |இவர் வீட்டை பூட்டிவிட்டு மன்றாம் பாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 3 பவுன் தாலி செயின் – கம்மல் ஆகியவற்றை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர். செய்தார்.இதுகுறித்து ஆர் எஸ் புரம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.