கோவை சுந்தராபுரம் அண்ணா டீச்சர்ஸ் காரணியை சேர்ந்தவர் சிவகாமி சுந்தர்ராஜ் ( வயது 52) சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். தங்களை ஜோதிடர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.சிவகாமிக்குதோஷம் இருப்பதாகவும், பூஜை வைத்து அதை நீக்கிவிடலாம் என்று கூறினார்கள் .இதை நம்பிய சிவகாமி 4 கிராம் மோதிரம் , ரூ.21ஆயிரம் பணம்ஆகியவற்றை பூஜையில் வைத்தார்..பூஜை முடிந்ததும் நகை பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.பூஜை முடிந்த பிறகுஅந்த இருவரும் நைசாக வெளியேசென்றுவிட்டனர்..அவர்கள் சென்ற பிறகு பூஜை அறையில் வைத்திருந்த 4 கிராம் மோதிரம் ரூ 21 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. நகை – பணத்துடன் இருவரும் எங்கோ மாயமாகிவிட்டனர்.இதுகுறித்து சிவகாமி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் வினோத்குமார் வழக்கு பதிவு செய்து கணேசபுரம் ரமேஷ் ( வயது 27) என்பவரை கைது செய்தார் .அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0