கோவை கடைவீதி ,பவளம் தெருவை சேர்ந்தவர் தனபால் ( வயது 49) நகைக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நகை வியாபாரம் செய்துவரும் ராஜகுமாரன் ,அவரது மனைவி மகேஸ்வரி அவரின் சகோதரர் ராம் தாஸ் ஆகியோர் தனபாலிடம் ரூ.2 கோடி 50 லட்சத்துக்கு நகையை கடனாக கொடுங்கள் 2 நாட்களில் அதற்கான பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று கூறினார்கள். அதன்படிகடந்த மாதம் 15 ஆம் தேதி தனபால் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள நகையைகடனாக கொடுத்தார். ஆனால் அவர்கள் 3 பேரும் ஒரு வாரம் ஆகியும் நகைக்கான பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. உடனே 3 பேரையும் தொடர்பு கொண்டு பணத்தை ஏன் கொடுக்கவில்லை? என்று கேட்டார். அதற்கு அவர்கள் விரைவில் பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக கூறியதாக தெரிகிறது .ஆனால் இதுவரை பணம் கொடுக்கவில்லை. இது குறித்து தனபால் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார் .அதன் பெயரில் போலீசார் ராஜ்குமார்அவரது மனைவி மகேஸ்வரி, ராம்தாஸ் ஆகிய 3பேர் மீது போலீசார்மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0