கோவையில் ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

கோவை சோமனூர் – சூலூர் இடையே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அதில் அந்த முதியவர் வெள்ளை நிற சட்டை மற்றும் கிரே கலர் பேண்ட் அணிந்திருந்தார். தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.