கோவை ரத்தினபுரி நெடுஞ்செழியன் வீதியைச் சேர்ந்தவர் சமீர். இவரது மனைவி அஸ்வினூர் ( வயது 24) இவர்களுக்கு 20 21 அன்று திருமணம் நடந்தது. அப்போது இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில்கணவர் சமீர் மற்றொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. கோபித்துக் கொண்டுகரும்புக்கடை சௌகார் நகரில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றார். அங்கு சென்ற சமீர் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சமீர் மனைவியையும் அவரது தாயா ரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து கரும்புக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்கு பதிவு செய்துகணவர் சமீரை கைது செய்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0