கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுதும் தீவிர கஞ்சா – குட்கா – போதை மாத்திரை வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள திவான்ஷா புதூர் மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே ஒரு லாரியில் குட்கா கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்தது .ஆனைமலபோலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் அங்கு சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்து ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 1208கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட் கா)மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியும் ,குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவரானகேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த முகமது சபீல் (வயது 39)கைது செய்யப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த நவாஸ் என்பவரை தேடி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0