அரசு பஸ் கண்டக்டருக்கு அடி – உதை. உறவினர் கைது

கோவை; உடுமலை அருகே உள்ள ஏரி பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ராம்குமார் (வயது 35) இவர் கோவையில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவிக்கும், அவரது தங்கை கணவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதில் மனைவிக்கு ஆதரவாக கணவர் ராம்குமார் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் வைத்து அவரது மனைவியின் தங்கை கணவரான பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த வீராசாமி ( வயது 37) அங்கு வந்தார். அவர் ராம்குமாரிடம் தகராறு செய்து அவரை பிடித்து கீழே தள்ளினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வீராசாமியை நேற்று கைது செய்தனர். இவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.