கோவை மாவட்டம் காரமடை,தோலம்பாளையம் பகுதியில் ஒருவர் கஞ்சா செடி வளர்ப் பதாக காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடமான தோலம் பாளையம் அருகே சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை பொரு ளான கஞ்சா செடி வளர்த்ததுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக பொன்னுசாமி மகன் கணேசன் (வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ எடையுள்ள 3 கஞ்சா செடி பறிமுதல்செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0