மின்சாரம் தாக்கி முதியவர் சாவு.

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள கே. என்.ஜி. புதூர் பிரிவு .எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வையாபுரி ( வயது 72) சமீபத்தில் பெய்த மழையால் அவரது வீட்டின் முன் மழைநீர் தேங்கி இருந்தது. அதை மின் மோட்டார் மூலம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது வையாபுரி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்த அவரது மகன் ரமேஷ் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.