கோவை செல்வபுரம், அம்மன் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அம்மன்குளம் கார்த்திக் என்ற கார்த்திக் ( வயது 24) இவர் நேற்று அவரது வீட்டில் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்தஅவரது நண்பர்கள் 3 பேர் அவரை எழுப்பி ஏன் மது வாங்கி தருவதில்லை? என்று கூறி தகராறு செய்தார்களாம். பின்னர் அவரை கத்தியால் குத்தினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு வழக்கு பதிவு செய்து சந்தானம், தினேஷ், தீபக் ஆகியோரை தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0