கோவை; தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சுதாகர் (வயது 31) திலக்சன் (வயது 25) இருவரும் நண்பர்கள் இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் சூலூர் அருகே குளத்தூர் பிரிவு பகுதியில் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திலக்சன் சுதாகரிடம் இருந்து ரூ 1500 கடன் வாங்கி இருந்தார். அந்தப் பணத்தை திலக்சன் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது சுதாகர் தான் கடனாக கொடுத்த பணத்தை திருப்ப கேட்டுள்ளார். அப்போது குடிபோதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திலக்சன், சுதாகரை பிடித்து கிளை தள்ளிவிட்டார் கீழே விழுந்து சுதாகரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சுதாகர் நேற்று இறந்தார். இதை யடுத்து கொலை வழக்காக மாற்றி திலக்சனை போலீசார் கைது செய்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0