கோவை; கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் தாஸ் (வயது 31) இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மம்தா ( வயது 30) என்பவரை கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தாஸ் கட்டிட வேலை செய்து வருகிறார். மம்தா அந்த பகுதியில் உள்ள தனியா நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தனது மனைவியின் நடத்தையில் தாசுக்கு சந்தேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்க ளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 3ஆம் தேதி மீண்டும் கணவன் – மனைவிக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாஸ் தனது வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மம்தாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது .பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மம்தாவை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் மம்தா நேற்று உயிர் இழந்தார். கருமத்தம்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துகணவர் தாசை தேடி வருகிறா ர்கள்.நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0