கோவை சுக்கிரவார்பேட்டையில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் வசிக்கும் காவலர் குடும்பங்களை சேர்ந்தமாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் 26 மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்கள். இதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.. இந்த மாணவிகளுக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன் நினைவு பரிசுகள் வழங்கினார்.விழாவில் கரிவரதராஜ பெருமாள் சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜோதி பாபு, பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் பரமசிவன் மகேஸ்வரன், ராஜா விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0