கோவை சித்தாபுதூரைசேர்ந்தவர் சண்முக குமார். இவரது மனைவி சரோஜா ( வயது 43) இவர் கோவை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் குடிப்பழக்கம் உடையவர். எந்த வேலைக்கும் செல்லவில்லை. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரோஜா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து இவரது தம்பி செந்தில்குமார் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0