கூடுதல் வரி விதித்த மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட். ஆணையாளர் அதிரடி நடவடிக்கை.

கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோடு 8-வது வீதியில் வசிப்பவர் பழனிச்சாமி ( வயது 76) காவலாளி. ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.வீட்டின் முன்புற பகுதியை மெஸ் நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். “ட்ரோன்” சர்வே எடுத்த மாநகராட்சி அலுவலர்கள் வீட்டின் மொத்த பரப்பையும் வணிக பகுதியாக மாற்றி சொத்து வரி மறு சீராய்வு செய்துள்ளது. இவர் தனது வீட்டுக்கு இதுவரை வரி ரூ 2,182 மட்டும் செலுத்தி வந்தார். வரி சிராய்வு செய்ததால் இனி 6 மாதத்துக்கு ஒரு முறை ரூ 51 ஆயிரத்து 322 சொத்து வரி, குப்பை வரி ரூ. 300, அபராத கட்டணம் ரூ.1,050 சேர்த்து ஒரு ஆண்டுக்கு ரூ 1 லட்சத்து 5 ஆயிரத்து 344 செலுத்த வேண்டும் என மாநகராட்சி யிலிருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஓட்டு வீட்டில் பழனிச்சாமி பரிதாபமாக நின்ற வீடியோ புகைப்படங்கள் வெளியானது. இதை அறிந்த மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இந்த தவறுக்கு காரணமான வரி வசூலிப்பவரைபணியிடை நீக்கம் ( சஸ்பெண்ட் ) செய்யவும், மண்டல உதவி வருவாய் அலுவலருக்கு “மெமோ ” கொடுக் கவும் உத்தரவிட்டார் .இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி துணை ஆணையர் குமரேசன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினார். அதன்படி துணை ஆணையர் விசாரணை நடத்தினார். டிரோன் மூலம ஆய்வு செய்து வரி சீராய்வு செய்தபோது பணியாற்றிய வரி வசூலர் ஜெய்கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். தற்போதைய வரி வசூலர் ஆனந்த் பாபு, உதவி வருவாய் அலுவலர் பிரபாகரன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் விநியோகம் செய்ய ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.