கோவை சிறையில் தண்டனை கைதி திடீர் சாவு.

கோவை; நீலகிரி மாவட்டம், கூடலூர்,காசிம் வயல் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 56) இவர் கூடலூர் பகுதியில் நடந்த ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.நேற்று சிறையில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரைசிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.இதுகுறித்து ஜெயிலர் சரவணகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.