கோவை சிங்காநல்லூர் உப்பிபாளையம், காந்திநகர் முதல் வீதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் சந்தோஷ் குமார் (வயது 25) டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடி விட்டு உப்பிலி பாளையம் காந்தி நகர் விநாயகர் கோவில் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது முன் விரோதம் காரணமாக அங்கு வந்த 3 பேருக்கும் இவருக்கும் இடையே வாய் தகராறு ஏற் பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை இரும்பு கம்பியால் சரமாரி தாக்கியது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டது. இதில் சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்தார்…அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இது குறித்து சந்தோஷ் குமார் சிங்காநல்லூர் போலீசில்புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குரளரசன் விசாரணை நடத்தி சவுரிபாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்த ஜெகதீசன் ( வயது 27)அரவிந்தன் ( வயது 31) உப்பிலிபாளையம் தேவேந்திர வீதியைச் சேர்ந்த மகேந்திரன் ( வயது 54)ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0