கோவை கணபதி நஞ்சப்பா லே அவுட் டை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். 4 ஆண்டு களுக்கு முன்புஇவர் இறந்து விட்டார். இவரது மகன் சஞ்சய் குமார் ( வயது 19)இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி .காம். ( ஐ.டி.) 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவரது தாயார் மகாலட்சுமி வேலைக்கு சென்று விட்டார் சஞ்சய் குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது காதலி அபிநயா அவருக்கு போன் செய்தாராம். சஞ்சய் குமார் எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அபிநயா சஞ்சய் குமாரின் நண்பர்களுக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். அவர் வீட்டின் கதவை தட்டிப் பார்த்தார். திறக்கப்படவில்லை.அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சஞ்சய் குமார் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இவர் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண் டாரா ?அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது தெரியவில்லை.இது குறித்து அவரது தாயார் மகாலட்சுமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0