கோவை ராமநாதபுரம், திருவள்ளூர் நகர் ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 76) இவர் பி.எஸ். என்.எல் நிறுவனத்தில் மாவட்ட இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரதுசெல்போன் வாட்ஸ் அப்அழைப்பில் ஒருவர் பேசினார். அவர் தன்னை சிபிஐ அதிகாரி என்றும் பழனிச்சாமி வங்கி கணக்கில் முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக தங்கள் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளோம். அதிகாரிகள் தங்களை கைது செய்ய 2 நாட்களில் வருவார்கள்.இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தங்கள்வங்கி கணக்குகள் பற்றிய முழு விவரங்களையும் உடனே அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனால் பயந்து போன பழனிச்சாமி அனைத்து விவரங்களை அனுப்பி வைத்தார். சிறிது நேரத்தில் பழனிச்சாமி வங்கி கணக்கில் இருந்த ரூ 59 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி அந்த செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். . ஆனால் ஸ்விட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பழனிச்சாமி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0