கல்லூரி மாணவருக்கு பீர் பாட்டில் குத்து. வாலிபர் கைது. 3 பேருக்கு வலை.

கோவை; திண்டுக்கல்,பாலகிருஷ்ணா புரம்,சக்தி நகரைசேர்ந்தவர் கணபதி. இவரது மகன் ஆனந்த ராஜ்குமார் வயது 19 இவர் கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி. இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கோவை புதூர் பிரிவு இபி காலனியில்அறை எடுத்து தங்கியுள்ளார்.கடந்த 10 ஆம் தேதி ஆனந்த ராஜ்குமார் நஞ்சை கவுண்டன் புதூரில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டுக்கு தனது நண்பர் கோபாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு சென்றிருந்தார் .அப்போது அவரது நண்பர் கவுசிக் செல்போன் தொலைந்து விட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்த ராஜகுமார் கவுசிக் செல்போன் தொலைந்தது குறித்துஅஜித் குமாரிடம் கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் அவரது நண்பர்கள் இம்ஹாத்,அருண், தவ்பீக் ஆகியோர் சேர்ந்து ஆனந்தராஜ்குமார் தலையில்பீர் பாட்டிலால் தாக்கினார்கள் .பின்னர் அவரை மிரட்டி செல்போனை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர் .இதுகுறித்து ஆனந்தராஜ் குமார் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் குமார் ( வயது 25)என்பவரை கைது செய்தனர். இவரது நண்பர்கள் இம்ஹாத், அருண், தவ்பீக் ஆகியோரை தேடி வருகிறார்கள் இவர்கள் மீது கொலை முயற்சி தாக்குதல் உட்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.