கல்விக் கடனை கடைசி நேரத்தில் ரத்து செய்த வங்கி;லண்டன் சென்று PG படிக்க வேண்டும் என கனவில் இருந்த மாணவர் வேதனை..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ‘காவா குளம்’ கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் ராம். இவர் PG பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவில் லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் முறையாக பதிவேற்றம் செய்து அதற்குரிய விண்ணப்பத்தையும் எடுத்து வந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு பணம் பல லட்சங்கள் செலவாகும் என கூறியதையடுத்து கீழக்கரையில் உள்ள ஒரு தேசிய வங்கிக்கு சென்று விண்ணப்பித்துள்ளனர். அதனை அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள வங்கி கிளைக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வங்கியில் கேட்ட அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது முறையாக வங்கியின் வழக்கறிஞர் கேட்ட அனைத்தையும் கொடுத்த பிறகு தொகை அதிகமாக இருந்ததால் ஏதாவது சொத்து பத்திரம் அடமானமாக கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தனது உறவினருடைய சொத்து பத்திரத்தையும் கொடுத்துள்ளனர். ஆனாலும், வங்கியில் உள்ள உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கடைசி வரை எதையோ எதிர்பார்த்து தனக்கு கல்விக்கடனை வழங்காமல் கடைசி நாளில் தங்களால் கல்வி கடன் வழங்க இயல முடியாது என தள்ளுபடி செய்துவிட்டதாக தெரிகிறது.

இது போன்று இழுத்தடிப்பு செய்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.அரசுகள் என்னதான் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கினாலும், இது போன்ற சில வங்கிகளில் மாணவர்களை அலைக்கழிப்பு செய்து மேல்படிப்பு பயில முடியாமலும் சில மாணவர்கள் படிப்பை தொடர முடியாமலும் வேறு பணியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.