கோவை கவுண்டம்பாளையம் சிவ நகரை சேர்ந்தவர் சேகர் ( வயது 52) ஆட்டோ டிரைவர். இவர் கோவை வடக்கு மாவட்டபாரத் சேனா செயலாளராகவும் உள்ளார். இவரது மகன் மணிபாரத். இவரை கஞ்சா விற்பனை செய்ததாக கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்தனர். இதை அறிந்து சேகர் நேற்று முன்தினம் கவுண்டம் பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தனது மகன் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை கேட்டார். மேலும் தனது மகன் கஞ்சா விற்பனை செய்யவில்லை. ஆனால் அவன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறினார். இதனால் அவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸ் நிலையத்தை விட்டு அவசரமாக வெளியே வந்த சேகர் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியபடி தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த பெட்ரோல் தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் நள்ளிரவில் சேகர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்..இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0