கோவை துடியலூர்அருகே உள்ள வெள்ளகிணறுஅம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பொன்னம்மாள் ( வயது 55) இவர் நேற்று துடியலூர் – சரவணம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது .இதில் பன்னம்மாள் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது கணவர் செல்வராஜ் கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக டிப்பர் லாரி ஓட்டி வந்த நீலாம்பூர், குட்டைப் புதூர் வீதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 29) கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0