கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் கூட்டமாகவும் மற்றும் ஒற்றைக் யானையாகவும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனை தடுப்பதற்காக வனத் துறையினரும் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். இந்நிலையில் உணவு தேடி ஆக்ரோசமாக சுற்றி வரும் யானைகளை தடுக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை யானைகள் தாக்கி வருவது தொடர் கதையாகி உள்ளது. இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்று வட்டார பகுதிக்குள் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வேலி அமைத்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து இருந்தார். அந்தப் பணிகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பெரியநாயக்கன் பாளையம் பழைய புதூர் பகுதியில் உள்ள மேட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி வேலுமணி (74) என்பவர் தோட்டத்திற்கு முன் புறம் உள்ள கேட்டை பூட்டுவதற்காக சென்றுள்ளார். பூட்டினை பூட்டிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒற்றை யானை அவரை தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த வனத்துறை மற்றும் பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் வேலுமணி யின் உடலை மீட்டு பிரேத உடற்கூறு சோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வாழை மரங் களை தின்று கொண்டு இருந்த அந்த ஒற்றை யானை அங்கு இருந்து சென்றது. ஒற்றை யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்சோகத்தையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0