ஒரே நேரத்தில் 160 மாத்திரைகளை தின்று மாற்றுத்திறனாளி தற்கொலை.

கோவை வெள்ளலூர்அருகே உள்ள கஞ்சி கோணாம் பாளையம், அசோக் மேத்தா வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 40),இவர் பிறவியில் இருந்தே கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் இதற்க்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி இவர் அளவுக்கு அதிகமாக 160 மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது தாயார் காமாட்சி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.