திண்டுக்கல் மாவட்டம் பழனி பக்கம் உள்ள சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சூர்யா (வயது 26) எம். பி. ஏ. பட்டதாரி. இவர் கடந்த 6 மாதமாக கோவை எல். அண்ட் . டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழிராக வேலை பார்த்து வந்தார்..இவர் கடந்த 2 வாரமாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று கோவை உக்கடத்தில் உள்ள ” ஐ லவ்” பூங்காவில் இவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது தந்தை கோவிந்தராஜ் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0