விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கணேசன் ( வயது 60) இவர் பேரூர் பக்கம் உள்ள செல்லப்ப கவுண்டன் புதூரில்தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார் .கடந்த 22- ஆம் தேதி வேலை செய்து கொண்டிருக்கும் போது இவரது வலது கையில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல்நேற்று மாலை இறந்தார் .இது குறித்து அவரது மகன் மாரிமுத்து பேரூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0