பூஜை அறையில் தீ பிடித்து மூதாட்டி பரிதாப பலி..

கோவை குறிச்சி, அவுசிங் யூனிட்டை சுப்பிரமணியம். இவரது மனைவி பார்வதி (வயது 69) இவர் நேற்று முன் தினம் வீட்டில் உள்ள பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது குத்துவிளக்கில் எரிந்து கொண்டிருந்த தீ அவரது நைட்டியில் பட்டு தீ பிடித்தது. இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை இறந்தார் .இது குறித்து அவரது கணவர் சுப்பிரமணியம் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார் சப் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.