உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் துறைச்சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

நீலகிரி மாவட்டம், உதகை, தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் ஏ.பி. நந்தகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், (உடுமலைப்பேட்டை), .கடம்பூர் ராஜு (கோவில்பட்டி), ஒய். பிரகாஷ் (ஓசூர்) ஆகியோர் தலைமையில் (14.02.2025) துறைச்சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் முதன்மைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்
லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஷ்.நிஷா இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபாசங்கர் இ.வ.ப., உட்பட பலர் உள்ளனர்.