கோவையில் கள்ளக்காதலன் வெட்டி படுகொலை. மனைவிக்கும் அரிவாள் வெட்டு.

.கோவை; திருவாரூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 40)இவரது மனைவி வாணி
பிரியா (வயது 38)இவர்களுக்கு ஒரு மகன் -ஒரு மகள் உள்ளனர்.கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வாணி பிரியா அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூரை சேர்ந்த மகேந்திரன் ( வயது 42) என்பவருக்கும் வாணிபிரியாவுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் பீளமேடு சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இன்று காலையில் கணவர் பிரபாகரன்வாணி பிரியாவின்வீட்டுக்கு வந்தார். வீட்டில் வாணிபிரியாவும் ,கள்ளக்காதலன் மகேந்திரனும், பானுப்பிரியாவின் மகனும் இருந்தனர்,மகள் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டார். அப்போது பிரபாகரனுக்கும் மகேந்திரனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகேந்திர னையும், மனைவி வாணிபிரியாவையும் சரமாரியாகவெட்டினார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மகேந்திரன் அதே இடத்தில் இறந்தார்.படுகாயம் அடைந்த வாணி பிரியா கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் இருந்த தனது மகனை அழைத்துக் கொண்டு பிரபாகரன் தப்பி ஓடிவிட்டார்..இது பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன்,உதவி கமிஷனர் வேல்முருகன் ,இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக பீளமேடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பிரபாகரனை தேடி வருகிறார்கள்..கள்ளக்காதலில் ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.