கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா ஆகியோர் நேற்று கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகளும், 8 சிரஞ்சியும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதுஇவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இதை கடத்தி வந்த வடவள்ளி, கஸ்தூரி நாயக்கன்பாளையம் தியாகராஜன் மகன் நிரஞ்சன் ( வயது 24) உக்கடம் பைபாஸ் ரோடு ஜி எம் நகரை சேர்ந்த பைசல் ரகுமான் ( வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்கூட்டரும் ,செல்போனும்பறிமுதல் செய்யப் பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0